ஒரு சமயம் சோழன் காவிரி கரையோரத்தில் ஒரு சங்கு வாயைத் திறந்த படியே வானத்தை நோக்கியபடி இருக்கக் கண்டதும் அவன் வியப்புற்றான். அப்போது கரையோரத்து, மரத்தின் பூக்களிலிருந்து ஒரு துளி தேன் அதன் வாயில் கொட்டிற்று. அவன் உள்ளம் அதனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தது. இயற்கையின் கருணையாகிய அரிய ஆற்றல் அவனுக்குப் புலனாயிற்று.ஆழ்கடலில் வீற்றிருக்கும் அறிவற்ற சங்கினையும் நிலத்தின் மேல் வந்து அண்ணாந்திருக்கச் செய்து, அதன் வாயில் தேன் துளியினையும் வீழச்செய்து இன்புறுத்திய பெருங்கருணை அவனை ஆட்கொண்டது. அந்த நினைவிலே திளைத்தவனாகத் தன் அரண்மனைக்குச் சென்றான். இரவெல்லாம் அந்தக் காட்சி அவன் மனத்தை விட்டு அகலவேயில்லை. மறுநாட்பொழுதும் வந்தது. சோழ அவையும் கூடிற்று. மன்னன் அவை நாயகனாக அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒளவையார் சோழனின் அவையுள் மெல்ல நடந்து வந்தார். அவரைக் கண்டதும் வருக! வருக! என்று வரவேற்றான் மன்னன். 'அமர்க' எனவும் சொன்னான். ஆனால் அங்கே அமர்வதற்கு இருக்கை எதுவும் இல்லாதததை கவனிக்கவில்லை; அதுபற்றி எவரும் கவலைப்படவுமில்லை. ஒளவையாரோ நெடுந்தொலைவினின்றும் நடந்து வந்தவர்; பல நாட்களாக நடந்து சோர்ந்து போயிருந்தவர்; சோழனைக் காணவேண்டுமென்ற ஆர்வத்தின் மிகுதியினாலே தம் களைப்பையும் மறந்து உடனே சென்றவர். அவரை அவன் முறையாகக் கவனிக்காது, எவரையோ வரவேற்பது போல வருக அமர்க!' என்று சொன்னது அவருக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. அப்போது அவர் பாடிய செய்யுள்.
கால் நொந்தேன் நொந்தேன் கடுகி வழி நடந்தேன்
யான் வந்த தூரம் எளிது அன்று - கூனல்
கருந்தேனுக்கு அண்ணாந்த காவிரி சூழ் நாடா
இருந்தேனுக்கு எங்கே இடம்?
கடுகி - வதங்கி, கடினபட்டு, கடுகு போல் சிறுத்து
கூனல் - சங்கு, நத்தை
சங்கானது மிகுதியான தேனைப் பருகுவதற்காகத் தன் வாயைத் திறந்து மேல் நோக்கியபடி இருக்கின்ற வளமுடைய, காவிரியாற்றில் சூழப்பெற்ற நாட்டிற்கு உரியவனே! நின்னைக் காணும் ஆர்வத்தாலே விரைவாக வழியினை எல்லாம் நடந்து கடந்தேன். என் கால்களும் மிகவும் நோவுற்றன. யான் கடந்து வந்த தூரமோ கடத்தற்கு எளிதல்லாத மிக்க நெடுந்தூரம் ஆகும். அங்ஙனம் வந்து நின் அவைக்கண் நின்றிருக்கும் எனக்கு, அமர்வதற்கு ஏற்ற இடம்தான் எங்கேயோ?” என்பது செய்யுளின் பொருள்.
இருந்+ தேனுக்கு எங்கே இடம்? - சங்குக்கு தேன் குடுத்த நாட்டில் இருக்கும் எனக்கு தேன்(பரிசு) இல்லையா எனவும் கொள்ளலாம்
கால் நொந்தேன் நொந்தேன் கடுகி வழி நடந்தேன்
யான் வந்த தூரம் எளிது அன்று - கூனல்
கருந்தேனுக்கு அண்ணாந்த காவிரி சூழ் நாடா
இருந்தேனுக்கு எங்கே இடம்?
கடுகி - வதங்கி, கடினபட்டு, கடுகு போல் சிறுத்து
கூனல் - சங்கு, நத்தை
சங்கானது மிகுதியான தேனைப் பருகுவதற்காகத் தன் வாயைத் திறந்து மேல் நோக்கியபடி இருக்கின்ற வளமுடைய, காவிரியாற்றில் சூழப்பெற்ற நாட்டிற்கு உரியவனே! நின்னைக் காணும் ஆர்வத்தாலே விரைவாக வழியினை எல்லாம் நடந்து கடந்தேன். என் கால்களும் மிகவும் நோவுற்றன. யான் கடந்து வந்த தூரமோ கடத்தற்கு எளிதல்லாத மிக்க நெடுந்தூரம் ஆகும். அங்ஙனம் வந்து நின் அவைக்கண் நின்றிருக்கும் எனக்கு, அமர்வதற்கு ஏற்ற இடம்தான் எங்கேயோ?” என்பது செய்யுளின் பொருள்.
இருந்+ தேனுக்கு எங்கே இடம்? - சங்குக்கு தேன் குடுத்த நாட்டில் இருக்கும் எனக்கு தேன்(பரிசு) இல்லையா எனவும் கொள்ளலாம்
Comments
Post a Comment